பயனாளி உஜ் ஸோனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் பயனாளியின் நேரடி குடும்ப உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
நோயின் தன்மை, சிகிச்சைகான ஆவணங்கள், மருத்துவக் குறிப்புகள், மருத்துவச் செலவின பில், பணிபுரிந்த நாட்களின் NMR நகல், ம.கா.தே.ஊ.வே.உ. திட்ட அடையாள அட்டையின் முன்பக்கம் & உட்புற வருகைப்பதிவேடு ஆகியவற்றின் நகல்களை கட்டாயம் இணைக்க வேண்டும்.
பயனாளி அல்லது பயனாளியின் குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் ஊராட்சியில் பணிநடைபெற்றுள்ள மொத்த வேலை நாட்களில் குறைந்தபட்சம் 50% வேலை நாட்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
பதிவு செய்துள்ள நடப்பாண்டில் ஒரு முறை மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலும்.
பயனாளி உஜ் ஸோனா திட்டத்தின் வேறு உபதிட்டங்கள் எவற்றிலும் விண்ணப்பித்து பயன் பெற்றிருக்கக் கூடாது.