ஈமக்கிரியை உதவித்தொகை - பணித்தள மரணம்

உஜ் ஸோனா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள நேரடி பயனாளிகளுக்கான ஈமக்கிரியை உதவித்தொகை.

  • பயனாளி பணித்தளத்தில் மரணித்திருக்க வேண்டும். அல்லது பணித்தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாகவோ, உடல்நலக்குறைவின் காரணமாகவோ மரணித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் பயனாளியின் நேரடி குடும்ப உறுப்பினராகவோ, நேரடி வாரிசாகவோ இருத்தல் வேண்டும்.
  • இறப்புச் சான்று, வாரிசு சான்று, நடப்பாண்டின் NMR நகல், ம.கா.தே.ஊ.வே.உ. திட்ட அடையாள அட்டையின் வெளிப்புற அட்டை மற்றும் உட்புற வருகைப் பதிவேட்டின் நகல் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும்.
  • பயனாளி அல்லது பயனாளியின் குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் ஊராட்சியில் பணிநடைபெற்றுள்ள மொத்த வேலை நாட்களில் குறைந்தபட்சம் 50% வேலை நாட்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  • பயனாளி உஜ்ஸோனா திட்டத்தின் வேறு உபதிட்டங்கள் எவற்றிலும் விண்ணப்பித்து பயன் பெற்றிருக்கக் கூடாது.